செய்திகள்
அர்ஜுன் சம்பத்

ரஜினி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும்- அர்ஜுன் சம்பத் பேட்டி

Published On 2020-03-09 13:10 GMT   |   Update On 2020-03-09 13:10 GMT
நடிகர் ரஜினி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
கரூர்:

கரூரில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான விஷம பிரசாரத்தினை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(சி.ஏ.ஏ.) எதிரான போராட்டங்களில் மேற்கொள்கின்றனர். இந்த போராட்டம் தொடர்பாக போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்து உள்ளது. எனவே சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் அமைதி, நல்லிணக்கம் ஏற்பட முழு முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே, இளைஞர்களுக்கு தேர்தலிலே வாய்ப்பு அளிப்பது, பிரதிபலன் எதிர்பாராமல் நிர்வாகிகள் செயலாற்றுவது உள்ளிட்ட முடிவுகளை எடுத்தாக கூறுகிறார்கள். ஆனால் ஒரு விஷயம் ஏமாற்றமளிப்பதாக ரஜினி கூறினார். முதல்-அமைச்சர் பொறுப்பினை அவர் எடுத்து கொள்ளாமல் அவர் கட்சி பொறுப்பிலே இருந்து கொண்டு, வேறொருவரை முதல்- அமைச்சராக்கி அரசை நடத்துவது என்பதை அவர் முன் வைத்ததாகவும், அந்த யோசனையை நிர்வாகிகள் மறுத்ததாகவும் கூறுகின்றனர்.

ரஜினி எப்போதும் பதவி நாற்காலிக்கு ஆசைபட்டவர் அல்ல. அடுத்த தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என சிந்திப்பவர் அவர். அது தான் ஆன்மிக அரசியல் கொள்கை. ஆனால் சூழல் அப்படி அல்ல. ரஜினி தான் அடுத்த முதல்-அமைச்சராக வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இதில் அவர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News