செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை

சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் பரிசு- கல்வித்துறை தகவல்

Published On 2020-02-20 03:16 GMT   |   Update On 2020-02-20 03:16 GMT
25 ஆண்டுகள் மாசின்றி, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின்படி அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 25 ஆண்டுகள் மாசின்றி, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

எனவே தங்கள் பள்ளியில் 25 ஆண்டுகள் மாசின்றி பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்களை, தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் 21-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News