செய்திகள்
சீமான்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Published On 2019-09-26 04:43 GMT   |   Update On 2019-09-26 05:04 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜர் நகர் தொகுதிகளில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் ராஜநாராயணனும் போட்டியிடுகிறார்கள். கந்தசாமி சமூக செயற்பாட்டாளராக உள்ளார். ராஜநாராயணன் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரவீனா மதியழகன் என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அக்குபஞ்சர் டாக்டராக உள்ளார்.
Tags:    

Similar News