செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை-வைரம் கொள்ளை

Published On 2019-09-21 03:48 GMT   |   Update On 2019-09-21 03:48 GMT
சென்னை நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சென்னை:

சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் சபரிமலைக்கு சென்றுவிட்ட நிலையில், மனைவியும், குழந்தைகளும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
Tags:    

Similar News