செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2019-08-26 04:04 GMT   |   Update On 2019-08-26 04:04 GMT
ஒகேனக்கலில் நேற்று காலை 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லுக்கு கடந்த 19 நாட்களுக்கு முன்பு 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. அதன் பிறகு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று காலை 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டது. என்றாலும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. 19-வது நாளாக இன்று அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை நீடிக்கிறது. அருவிகளில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு தான் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.



Tags:    

Similar News