செய்திகள்
திமுக

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு

Published On 2019-08-24 07:33 GMT   |   Update On 2019-08-24 07:33 GMT
2019-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருவண்ணாமலையில் கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.

சென்னை:

தி.மு.க. சார்பில் ஆண்டு தோறும் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2019-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருவண்ணாமலையில் கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.

இதில் பெரியார் விருது த.வேணுகோபாலுக்கும், அண்ணா விருது சி.நந்த கோபாலுக்கும், கலைஞர் விருது ஏ.கே. ஜெகதீசனுக்கும், பாவேந்தர் விருது சித்திரமுகி சத்தியவாணிமுத்துவுக்கும், பேராசிரியர் விருது, தஞ்சை இறைவனுக்கும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News