செய்திகள்
கைது

சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது

Published On 2019-08-04 17:05 GMT   |   Update On 2019-08-04 17:05 GMT
சங்கரன்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மனைவி பிரேமா (வயது30). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (27), தொழிலாளி. சம்பவத்தன்று பிரேமாவும், செல்வகுமாரும் பேசி கொண்டிருந்தனர். 

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு வீட்டுக்குள் புகுந்து பிரேமாவிடம், செல்வகுமார் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வந்தனர். ஆனால் செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News