search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "misbehaving"

    மைசூருவில் தனது பிரச்சனையை தெரிவிக்க வந்த பெண்ணை கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி அவமதித்த சம்பவத்துக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #Siddaramaiah
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சித்தராமையா இன்று மைசூரு நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அவர் முன்னர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியை சேர்ந்த ஒருபெண் ஒலிபெருக்கி மூலம் தனது பிரச்சனையை சித்தராமையாவுக்கு தெரியப்படுத்தினார். 

    அந்தப் பெண் ஆவேசமாக பேசியதை கேட்டு ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சித்தராமையா, அவரது கையில் இருந்த மைக்கை பறிக்க முயன்றார். அப்போது, சித்தராமையாவின் கை அந்தப் பெண்ணின் துப்பட்டா மீது பட்டதால் மேலாடை லேசாக நழுவியது.

    ஒலிபெருக்கி பறிபோன நிலையிலும் சித்தராமையாவிடம் தனது குறைகளை அந்தப் பெண் ஆவேசமாக தெரிவித்தார். அவரது தோள்மீது கை வைத்து அமருமாறு சித்தராமையா எச்சரித்தார். 

    இந்த காட்சிகள் அனைத்தும் செய்தி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தலைப்புகளுடன் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், ‘ அந்தப் பெண்ணை சித்தராமையா அவமதித்தது குற்றம். சித்தராமையாவை என்ன செய்யப் போகிறார்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    அவர்கள் பெண்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணைத்தவிர (சோனியா) வேறு பெண்களுக்கு காங்கிரசார் மதிப்பளிப்பதில்லை’ என குறிப்பிட்டுள்ளார். #PrakashJavadekar #Siddaramaiah 
    ×