செய்திகள்
போலீசாரின் லத்திக்கு பலியான வாலிபரின் மனைவி தற்கொலை முயற்சி
போலீசார் லத்தியை வீசியதால் பலியான வாலிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த விவேகானந்தகுமார். நேற்று முன்தினம் இரவு சிம்மக்கல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அவரது மோட்டார் சைக்கிள் விபத்துகுள்ளானது. அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் லத்தி வீசியதால்தான் என உறவினர்கள் புகார் கூறினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா நேற்று மதுரை மாவட்ட பொறுப்பு கலெக்டர் சாந்த குமாரை சந்தித்து மனு அளித்தார். அப்போது 1½ வயது கைக்குழந்தையுடன் கலெக்டர் முன்னிலையில் கஜப்பிரியா கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
தொடர்ந்து விவேகானந்தகுமாரின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கஜப்பிரியாவும், அவரது உறவினர்களும் போராடி வந்த வேளையில் நேற்று நள்ளிரவு கஜப்பிரியா தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கஜப்பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த விவேகானந்தகுமார். நேற்று முன்தினம் இரவு சிம்மக்கல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அவரது மோட்டார் சைக்கிள் விபத்துகுள்ளானது. அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் லத்தி வீசியதால்தான் என உறவினர்கள் புகார் கூறினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா நேற்று மதுரை மாவட்ட பொறுப்பு கலெக்டர் சாந்த குமாரை சந்தித்து மனு அளித்தார். அப்போது 1½ வயது கைக்குழந்தையுடன் கலெக்டர் முன்னிலையில் கஜப்பிரியா கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
தொடர்ந்து விவேகானந்தகுமாரின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கஜப்பிரியாவும், அவரது உறவினர்களும் போராடி வந்த வேளையில் நேற்று நள்ளிரவு கஜப்பிரியா தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கஜப்பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.