செய்திகள்

திருவையாறு அருகே மாப்பிள்ளை பிடிக்காததால் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-05-23 09:58 GMT   |   Update On 2019-05-23 09:58 GMT
திருவையாறு அருகே மாப்பிள்ளை பிடிக்காததால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:

திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி நதியா (வயது 20). சசிகுமார் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.

நதியாவுக்கு சசிகுமார் தாய் மாமா உறவாகும். இவர்கள் திருமணம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்தின் பிறகு நதியா கணவர் மீது விருப்பம் இல்லாமலும், சரியாக சாப்பிடாமலும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி வீட்டிலிருந்து எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் வசிப்பவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்து விட்டார்.

இது சம்மந்தமாக நதியாவின் தாய் ஓலத் தேவராயன்பேட்டையை சேர்ந்த மஞ்சுளா மருவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து திருமணமாகி 3 மாதத்தில் புதுப்பெண் இறந்ததால் தஞ்சை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்தார்.
Tags:    

Similar News