செய்திகள்

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்

Published On 2019-04-29 03:14 GMT   |   Update On 2019-04-29 03:14 GMT
ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #RasipuramNurse #ChildKidnap
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக ஓய்வுபெற்ற நர்சு அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், இடைத்தரகர் அருள்சாமி, ஈரோடு அசீனா உள்பட 6 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில்  வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #RasipuramNurse #ChildKidnap

 

Tags:    

Similar News