செய்திகள்

6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது

Published On 2019-03-20 11:00 GMT   |   Update On 2019-03-20 11:00 GMT
தனியார் பள்ளியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 26). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நெப்போலியன் தன்னிடம் பயிற்சிக்கு வரும் முதலியார் பேட்டையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் புதுவை குழந்தைகள் நல குழுவிடம் புகார் செய்தனர். இதன் மீது குழந்தைகள் நல குழு தலைவர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.

அப்போது மாணவிக்கு நெப்போலியன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைகள் நலகுழு தலைவர் ராஜேந்திரன் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் செய்தார்.

புகாரை ஏற்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா முதலியார்பேட்டை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் நெப்போலியனை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News