2 மணிநேரம் தொடர்ந்து வன்கொடுமை செய்ததால் சிறுமி இறந்தார்- கைதான முதியவர் வாக்குமூலம்
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள தென் முடியனூரை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி அதே பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.
சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த விவசாய கூலிதொழிலாளி கணேசன் (60) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பியது தெரியவந்தது. செங்கம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான தலைமையிலான போலீசார் கணேசனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சம்பவத்தன்று நான் மது குடித்துவிட்டு போதையில் இருந்தேன் சிறுமி வீட்டின் அருகே தனியாக விளையாடி கொண்டிருந்தார்.
அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்தேன். அவளை ஏமாற்றி கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்த புதர் பகுதியில் கீழே தள்ளி கட்டிபிடித்தேன்.
இதனால் மிரண்டுபோன அவள் கூச்சலிட்டாள். வாயை பொத்தினேன். தொடர்ந்து 2 மணி நேரம் வன்கொடுமை செய்தேன். இதனால் சிறுமியின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி அவள் துடிதுடித்து இறந்து விட்டாள்.
போலீசில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கண்டு பிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கணேசன் மிகவும் கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளார். அவர் சிறுமியின் கழுத்தை பயங்கரமாக கடித்துள்ளார். அவரது பற்கள் சிறுமி கழுத்தில் பதிந்துள்ளது.
மேலும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான கணேசன் வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டார்.