செய்திகள்
சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தனது சொந்த கிராமமான எடப்பாடியை அடுத்துள்ள சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார். #EdappadiPalaniswami
எடப்பாடி:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நேற்று அவர் தனது சொந்த கிராமமான, எடப்பாடியை அடுத்துள்ள சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். முன்னதாக சிலுவம்பாளைம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேளதாளம் முழங்க ஊர்மக்களுடன் நடந்து சென்ற அவர் தனது தனது வீட்டருகே உள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றார்.
ஆலய வளாகத்தில் முதல்வரின் மனைவி ராதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பொங்கல் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து தனது விவசாய தோட்டத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அலங்கரிக்கப்பட்ட பசு மாடுகளுக்கு பூஜை செய்து வணங்கினார்.
மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, பழங்களை கொடுத்தார். அவர் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் சாமிதரிசனம் செய்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஊர் மக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்து உண்டார்.
பொங்கல் பண்டிகையினையொட்டி சிலுவம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்த எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெற்ற சிலம்பாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
பின்னர் அவர் தனது தாயார் தவசாயி அம்மாளிடம் குடும்பத்துடன் ஆசிபெற்றார். இதைத் தொடர்ந்து எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்துகூறி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கினார். #EdappadiPalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நேற்று அவர் தனது சொந்த கிராமமான, எடப்பாடியை அடுத்துள்ள சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். முன்னதாக சிலுவம்பாளைம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேளதாளம் முழங்க ஊர்மக்களுடன் நடந்து சென்ற அவர் தனது தனது வீட்டருகே உள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றார்.
ஆலய வளாகத்தில் முதல்வரின் மனைவி ராதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பொங்கல் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து தனது விவசாய தோட்டத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அலங்கரிக்கப்பட்ட பசு மாடுகளுக்கு பூஜை செய்து வணங்கினார்.
மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, பழங்களை கொடுத்தார். அவர் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் சாமிதரிசனம் செய்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஊர் மக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்து உண்டார்.
பொங்கல் பண்டிகையினையொட்டி சிலுவம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்த எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெற்ற சிலம்பாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
பின்னர் அவர் தனது தாயார் தவசாயி அம்மாளிடம் குடும்பத்துடன் ஆசிபெற்றார். இதைத் தொடர்ந்து எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்துகூறி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கினார். #EdappadiPalaniswami