செய்திகள்

மதுரை அருகே பாலமேட்டில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2018-12-19 11:07 GMT   |   Update On 2018-12-19 11:07 GMT
8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது தந்தை நடத்தும் கடைக்கு சென்றிருந்தார். கடையில் சிறுமி தனியாக இருந்தாள்.

அப்போது அங்கு வந்த அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லாணை பகுதியை சேர்ந்த ராம்குமார் (32) என்பவர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி, தாயிடம் கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ராம்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News