செய்திகள்

திண்டுக்கலில் ஒரே நாளில் 6 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2018-12-14 04:26 GMT   |   Update On 2018-12-14 04:26 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள எரியோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்யப்போவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சமூக நலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் அங்கு சென்றனர்.

அவர்கள் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை உறுதி செய்து அதனை தடுத்து நிறுத்தினர். இதேபோல் திண்டுக்கல் அருகில் உள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, தர்மத்துப்பட்டியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, பெருமாள்கோவில் பட்டியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி,

ஆத்தூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி, குள்ளனம்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி என ஒரே நாளில் 6 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதில் 16 வயது சிறுமிக்கு 35 வயது வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருமண ஏற்பாடுகள் செய்த பெற்றோர்களை அழைத்து பேசி மீண்டும் இதுபோன்ற முயற்சி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து எழுதி வாங்கினர்.

குழந்தை திருமணங்களை நடத்துவதும் அது குறித்த தகவல் அறிந்தால் சமூக நலத்துறை, சைல்டு லைன் அமைப்பினருக்கு தெரிவிக்கவும் அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News