செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 623 கன அடியாக சரிவு

Published On 2018-11-28 05:23 GMT   |   Update On 2018-11-28 05:23 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 5,664 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5,623 கன அடியாக சரிந்தது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 5 ஆயிரத்து 664 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 ஆயிரத்து 623 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து நேற்று மாலை முதல் டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 103.03 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.22 அடியானது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
Tags:    

Similar News