செய்திகள்

விருதுநகர் அருகே விபத்தில் வியாபாரி பலி

Published On 2018-11-27 05:48 GMT   |   Update On 2018-11-27 05:48 GMT
விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் வேன் மோதியதில் வியாபாரி பலியானார்.

விருதுநகர்:

தேனியைச் சேர்ந்த நாட்டு மருந்து வியாபாரி ஜெயராமன் (வயது 51). வியாபார வி‌ஷயமாக பல்வேறு ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

நேற்று அவர் விருதுநகர் வந்தார். அங்கு நண்பர்களிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு அருப்புக்கோட்டை சாலையில் சென்றார்.

பெரிய வள்ளிக்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது, பின்னால் தண்ணீர் வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விருதுநகர் கிழக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பலியான ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் இருக்கன்குடி மயில்வாணன் (48) கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News