செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 3-வது முறையாக 100 அடியை தாண்டியது

Published On 2018-11-14 04:50 GMT   |   Update On 2018-11-14 04:50 GMT
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100.02 அடியாக உயர்ந்தது. இதனால் இந்தாண்டு 3 வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 4 ஆயிரத்து 378 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 192 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.

கடந்த 11-ந் தேதி 100 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 12-ந் தேதி 99.86 அடியாக சரிந்தது. நேற்று 99.88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.02 அடியானது. இதனால் இந்தாண்டு 3 வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடதக்கது.

இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  #MetturDam
Tags:    

Similar News