செய்திகள்

மதுரை நர்சிங் மாணவியிடம் பாலியல் பலாத்காரம்- காதலன் கைது

Published On 2018-11-11 10:37 GMT   |   Update On 2018-11-11 10:37 GMT
நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலன் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை வடக்குமாசி வீதியைச்சேர்ந்த 16 வயது சிறுமி, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இதே கல்லூரியில் மதுரை தெப்பக்குளம் மீனாட்சி நகரைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் மருதநாயகம் (19) என்பவரும் படித்து வந்தார்.

அவருக்கும் வடக்குமாசி வீதி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இந்த நிலையில் தன்னை மருதநாயகம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மாணவி குற்றம் சாட்டினார். மேலும் வீட்டிற்கு வந்த அவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் காப்பாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திலகர்திடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதநாயகத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News