செய்திகள்

புதுவையில் இடி- மின்னலுடன் பலத்த மழை

Published On 2018-09-16 04:48 GMT   |   Update On 2018-09-16 04:48 GMT
புதுவையில் இடி - மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. #Rain

புதுச்சேரி:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும் புதுவையில் கடந்த 5 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல பயந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் கடும் புழுக்கத்தினால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். நேற்று பகலிலும் இதே நிலை நீடித்தது. ஆனால், மாலையில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தாலும் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 45 நிமிடம் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக ஒருசில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை வரை மழை தூறிக் கொண்டே இருந்தது.

கடந்த 5 நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலினால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த பலத்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். #Rain

Tags:    

Similar News