செய்திகள்

திருச்சி காவிரி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு- இல.கணேசன், ஜி.கே.வாசன் பங்கேற்பு

Published On 2018-08-26 11:16 GMT   |   Update On 2018-08-26 11:16 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி திருச்சி காவிரி ஆற்றில் இன்று கரைக்கப்பட்டது. #gkvasan #ilaganesan #Vajpayeesashes

திருச்சி:

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் இன்று 6 இடங்களில் கரைக்கப்பட்டது. திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணை தலைவர் சுப்பிரமணியம் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு அஸ்தியை கரைத்தனர்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் அஸ்தி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. லால்குடியில் இருந்து புறப்பட்டு அரியமங்கலம், டி.வி.எஸ். டோல்கேட், பீமநகர், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை வந்தடைந்தது. வழியில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையை அடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க. திருச்சி மாவட்ட தலைவர் தங்கராஜய்யன் மற்றும் புதிய தமிழகம், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும், காவிரி ஆற்றில் அஸ்தி கரைக்கப்பட்டது.  #gkvasan #ilaganesan #Vajpayeesashes

Tags:    

Similar News