செய்திகள்

நங்கவள்ளி வாலிபரை கரம்பிடித்த கல்லூரி மாணவி- பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

Published On 2018-08-20 15:12 GMT   |   Update On 2018-08-20 15:12 GMT
நங்கவள்ளியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நங்கவள்ளி:

நங்கவள்ளி போலீஸ் நிலையம் அருகில் வசித்து வருபவர் குமார் (வயது 34). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

திருநெல்வேலி மாவட்டம், இலாங்காட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி யில் பி.காம், 3-ம் ஆண்டு படித்து வருகிறார். முகநூலில் அறிமுகமான இருவரும் கடந்த 2 அண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி நங்கவள்ளியில் உள்ள குமார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நங்வள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 

இதுகுறித்து மகேஸ்வரியின் பெற்றோரிடம் போலீசார் தொடர்பு கொண்டபோது அவர்கள் மகளை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் புதுமண தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News