செய்திகள்
காவிரி ஆற்றில் இறங்கினால் போலீசார் மூலம் நடவடிக்கை - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து உள்ளது.
இன்று பிற்பகலுக்குப் பிறகு நீர் வரத்து 1 லட்சம் கன அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து உள்ளது.
இன்று பிற்பகலுக்குப் பிறகு நீர் வரத்து 1 லட்சம் கன அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery