திண்டுக்கல்லில் பணிக்கொடை வழங்க ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58). இவர் திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். இவரது 4 மாத சம்பளம் மற்றும் பணிக்கொடை ரூ.10 லட்சம் பெறுவதற்காக கருவூலத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
கண்காணிப்பாளர் சந்திரன் (40). அவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதை தர மறுத்ததால் கடந்த 6 மாதங்களாக அலைக்கழிப்பு செய்துள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் செல்வராஜ் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனையின் பேரில் கருவூலத்திற்கு சென்ற செல்வராஜ் ரூ.8 ஆயிரம் தருவதாக சந்திரனிடம் கூறினார். அதற்கு சந்திரன் ஒத்துக் கொண்டார்.
அதன்பிறகு லஞ்ச ஒழிப்புதுத்துறையினர் கொடுத்த ரசாணயம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை கொடுத்தபோது டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் ரூபாவதி தலைமையிலான போலீசார் சந்திரனை கைது செய்தனர். #Bribe