என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bribe worker arrest"
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள நில அளவை பிரிவில் வாழப்பாடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் தனக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளை அளந்து தனிபட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்தார்.
அப்போது அங்கிருந்த ஊழியர் சவுந்திரராஜன் என்பவர் ரூ.20ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மாற்றித்தருவதாக கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இந்திராணி புகார் கொடுத்தார்.
இதையடுத்து சவுந்திரராஜனை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இன்று காலை இந்திராணி சவுந்திரராஜனை வாழப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பூக்கடைக்கு வருமாறும், அங்கு வைத்து பணம் தருவதாகவும் கூறினார். இதனால் சவுந்திரராஜன் பூக்கடைக்கு வந்தார்.
அப்போது இந்திராணி ரசாயண பொடி கலந்த ரூ.10ஆயிரம் நோட்டுகளை சவுந்திரராஜனிடம் வழங்கினார். அந்த சமயம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு சவுந்திரராஜனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58). இவர் திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். இவரது 4 மாத சம்பளம் மற்றும் பணிக்கொடை ரூ.10 லட்சம் பெறுவதற்காக கருவூலத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
கண்காணிப்பாளர் சந்திரன் (40). அவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதை தர மறுத்ததால் கடந்த 6 மாதங்களாக அலைக்கழிப்பு செய்துள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் செல்வராஜ் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனையின் பேரில் கருவூலத்திற்கு சென்ற செல்வராஜ் ரூ.8 ஆயிரம் தருவதாக சந்திரனிடம் கூறினார். அதற்கு சந்திரன் ஒத்துக் கொண்டார்.
அதன்பிறகு லஞ்ச ஒழிப்புதுத்துறையினர் கொடுத்த ரசாணயம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை கொடுத்தபோது டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் ரூபாவதி தலைமையிலான போலீசார் சந்திரனை கைது செய்தனர். #Bribe
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்