செய்திகள்

லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு 25-ந் தேதி விடுமுறை

Published On 2018-07-23 07:48 GMT   |   Update On 2018-07-23 07:48 GMT
லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரும் 25-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #LorryStrike #OddanchatramMarket
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களில் குறைந்த அளவு வாகனங்கள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காய்கறிகள் தேக்கமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றிச் சென்ற லாரி கிளீனர் கல் வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்ததால் லாரி டிரைவர்களிடையே மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர் களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 25-ந் தேதி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஒட்டன்சத்திரம் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வார விடுமுறை அளிக்கப்படும் நிலையில் வரும் 25-ந் தேதி விடுமுறை என்பதால் அன்று விவசாயிகள் யாரும் காய்கறிகள் கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LorryStrike #OddanchatramMarket

Tags:    

Similar News