செய்திகள்

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் - வண்டிபெரியாறில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Published On 2018-07-14 06:00 GMT   |   Update On 2018-07-14 06:00 GMT
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வண்டிப்பெரியாறில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. #Rain

கூடலூர்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் இந்த மழையின் தாக்கம் காணப்படுகிறது.

குமுளியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறில் கன மழை கொட்டி வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழை நீர் வழிவதற்கு கால்வாய் வசதிகள் இல்லாததால் அனைத்து சாலைகளிலும் மழை நீர் சென்ற வண்ணம் உள்ளது. சாரல் மழையும், அதனைத் தொடர்ந்து பலத்த மழையும் விட்டு விட்டு பெய்து வருவதால் மழை நீர் வழிவதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். வாகனங்களும் செல்ல முடியாததால் போக்குரவத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும் போக்கு வரத்து தடைபட்டுள்ளது. #Rain

Tags:    

Similar News