தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கினால் முதல் மந்திரியின் ரத்தத்தை குடிப்பேன்- காவிரி பாதுகாப்பு சமிதி தலைவர் ஆவேசம்
ஓசூர்:
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டித்து மாநில விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குருபூர் சாந்தகுமார் பேசியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்கு 4 டி.எம்.சி தண்ணீர் வழங்கினால் கர்நாடக மாநில தேர்தலை புறக்கணிப்போம், மேலும் தண்ணீர் திறந்து விடாதவாறு அணைகளை காவல் காப்போம், மழை பொய்த்துவிட்டதால் மாநிலத்தில் உள்ள அணைகள் வறண்டு கிடக்கின்றன.
4 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மண்டியா அருகே மத்தூருவில் பேட்டியளித்த காவிரி பாதுகாப்பு சமிதி தலைவர் ஜி.மா தேகவுடா கூறியதாவது:-
முதல் மந்திரி சித்தராமையா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று நாடகமாடி மறுபுறம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்டால் அவரது ரத்தத்தை குடிப்பேன் .
இவ்வாறு அவர் கூறினார். #Carveryissue #Siddaramaiah #cauverymanagementboard