செய்திகள்

கொடுங்கையூர்-வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் 3 போலீஸ் நிலையங்களில் கமி‌ஷனர் திடீர் ஆய்வு

Published On 2018-04-15 11:13 GMT   |   Update On 2018-04-15 11:13 GMT
சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று காலை கொடுங்கையூர், வியாசர்பாடி ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பூர்:

சென்னையில் உள்ள பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் குவித்து வைக்கப்பட் டுள்ளன. இந்த போலீஸ் நிலையங்களிலும் அது போன்று ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் போலீஸ் நிலைய வளாகத்திலுள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தர விட்டார்.

காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு உத்தர விட்டார். போலீஸ் நிலையத்திலும், வளாகத்திலும் சுத்தம், சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். #tamilnews

Tags:    

Similar News