செய்திகள்

நடுக்கடலில் ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் - இலங்கை கடற்படையிடம் 3 பேர் பிடிபட்டனர்

Published On 2018-04-12 03:03 GMT   |   Update On 2018-04-12 03:03 GMT
இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் படகை சோதனையிட்டதில் அதிலிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்:

இலங்கை கடற்படையினர் நேற்று நடுக்கடலில் ரோந்து சென்றபோது ஒரு பிளாஸ்டிக் படகு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனைக்கண்ட இலங்கை கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் அந்த படகை விரட்டிப் பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது அதில் 2.6 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

அதனை தொடர்ந்து தங்கத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் படகையும் அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சென்று அவர்கள் யார், தங்கம் எங்கு கடத்தப்படுகிறது என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதேபோல மண்டபம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பிடிபட்டது.

இந்த கஞ்சா கடத்தலுக்கும், தங்கம் கடத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  #tamilnews

Tags:    

Similar News