செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Published On 2018-04-08 17:36 GMT   |   Update On 2018-04-08 17:36 GMT
சிவகாசியில் உள்ள இரண்டு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் தரைச்சக்கரத்திற்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல், காக்கிவாடன்பட்டி என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இதற்கிடையே, பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 6 ஆக அதிகரித்தது.
மேலும், வெடி விபத்து தொடர்பாக ஆலைகளின் மேலாளர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளி பரமசிவம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News