செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2018-04-05 04:12 GMT   |   Update On 2018-04-05 04:12 GMT
திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து வந்த பயணியிடம் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து வந்த பயணியிடம் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்றிரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த அபுதாகிர் என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்த ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள 239 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.




Tags:    

Similar News