செய்திகள்

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு ஜூன் 3-ந்தேதி நடக்கிறது

Published On 2018-02-24 04:19 GMT   |   Update On 2018-02-24 04:19 GMT
புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி:

புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும், காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை கல்லூரியில் 50 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளது. எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு தோறும் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அதுபோல் 2018-ம் ஆண்டுக்கான ஜிப்மர் மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து ஜிப்மர் மருத்துவ கல்லூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 13.4.2018 கடைசி நாள் ஆகும். நுழைவு தேர்வு ஜூன் மாதம் 3-ந்தேதி நடைபெறும்.

நுழைவு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு 27.6.2018 முதல் 29.6.2018 வரை நடைபெற உள்ளது.

2-வது கட்ட கலந்தாய்வு 25.7.2018 அன்றும், 3-வது கட்ட கலந்தாய்வு 20.8.2018 அன்றும் நடைபெற உள்ளது.

இறுதிகட்ட கலந்தாய்வு 28.8.2018 அன்று நடை பெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் 30.9.2018.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News