செய்திகள்
தம்பதியிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்த மண்எண்ணை கேன்.

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி

Published On 2018-01-22 09:14 GMT   |   Update On 2018-01-22 09:14 GMT
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மெணசி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரும், இவரது மனைவியும் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிப்பதற்காக மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென தலையில் ஊற்ற முயன்றனர். இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடிச் சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது அந்த தம்பதியினர் கூறுகையில், வானியாறு அணை ஆயக்கட்டில் எங்களுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எங்கள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வந்த கால்வாயை சிலர் அழித்து விட்டனர். இதனால் வானியாறு அணை ஆயக்கட்டு தண்ணீரை எடுத்து விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அந்த தம்பதியை மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். #Tamilnews
Tags:    

Similar News