செய்திகள்
தொடர் மழை காரணமாக நெல்லை கண்டியப்பேரி குளம் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு

Published On 2017-11-22 09:44 GMT   |   Update On 2017-11-22 09:44 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முதல் இன்று காலை வரை பாபநாசத்தில் அதிக பட்சமாக 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3180.60கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு795.99 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் பலத்தமழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. நெல்லையிலும் தாமிரபரணி ஆற்றுக்கரையிலும் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று காலை 107.77 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 அடிநீர்மட்டம் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 780 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 82.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் 1 அடி உயர்ந்து இன்று 83.40 அடியாக உள்ளது.

இது போல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் வருமாறு:-

பாபநாசம்-105, சேர்வலாறு-43, கடனாநதி-25, சங்கரன்கோவில்-22, ராமநதி-20, அம்பை-18, கருப்பாநதி-17, குண்டாறு-17. சேரன்மகாதேவி-16, கொடு முடியாறு-10, அடவிநயினார்-8.6, ஆய்க்குடி-4.8, செங்கோட்டை-2.
.

Tags:    

Similar News