செய்திகள்

மைத்ரேயன் கூறியது அவருடைய சொந்த கருத்து: துணை சபாநாயகர் பேட்டி

Published On 2017-11-22 04:49 GMT   |   Update On 2017-11-22 04:49 GMT
மைத்ரேயன் எம்.பி. இரு அணிகளைச் சேர்ந்தவர்களின் மனங்கள் இணையவில்லை என்று கூறியது அவருடைய சொந்த கருத்து என்று சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
அவனியாபுரம்:

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க. ஸ்டாலின் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருவதாக கூறியிருந்தார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அதிக பெரும்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. அம்மா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம்.

தி.மு.க. தான் கூட்டணி கட்சிகளை இணைத்து 5 ஆண்டுகள் மைனாரிட்டி அரசை நடத்தியது.

மைத்ரேயன் எம்.பி. இரு அணிகளைச் சேர்ந்தவர்களின் மனங்கள் இணையவில்லை என்று கூறியது அவருடைய சொந்த கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது டி.டி.வி. தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறாரே என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.


Tags:    

Similar News