செய்திகள்

தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடி

Published On 2017-10-21 04:22 GMT   |   Update On 2017-10-21 04:22 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடியால் பரபரப்பு ஏற்பட்டது. அதைக் கவனித்த ராணுவத்தினர் உடனடியாக புதிய கொடி ஒன்றை கம்பத்தில் ஏற்றினர்.
சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளம் அமைந்துள்ளது. இங்குள்ள கொடிக்கம்பத்தில் பகல் வேளையில் தேசியக்கொடி பறக்கப்படுவது வழக்கம். காலை 6 மணியளவில் ஏற்றப்படும் தேசியக்கொடி, மாலை 6 மணிக்கு இறக்கப்படும். இந்தக் கொடியை ராணுவத்தினர் பராமரித்து வருகின்றனர்.

நேற்று காலையில் வழக்கம்போல தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பிற்பகலில் அந்தக் கொடியில் உள்ள பச்சை நிறத்தின் கீழ் பகுதியில் வட்டமாக கொடி கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வாட்ஸ்ஆப் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடப்பட்டது. அதைக் கவனித்த ராணுவத்தினர் உடனடியாக கிழிந்த தேசியக் கொடியை கீழ் இறக்கினர்.

மாறாக புதிய கொடி ஒன்றை உரிய மரியாதை செலுத்தும் கம்பத்தில் ஏற்றினர். தலைமைச் செயலகத்தில் சுமார் 20 நிமிடம் கிழிந்த கொடி பறந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடி ஏற்றும் போதே கிழிந்திருந்ததா அல்லது ஏற்றப்பட்ட பிறகு கிழிந்ததா என்பது தெரியவில்லை.
Tags:    

Similar News