செய்திகள்

5 நாட்களுக்கு பரோல்: சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற கைதிகள்

Published On 2017-10-16 09:10 GMT   |   Update On 2017-10-16 09:10 GMT
தீபாவளியை கொண்டாட 5 நாட்களுக்கு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

மதுரை:

மதுரை மத்திய சிறையில் 500-க்கு மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இங்கு தனியாக பெண்கள் சிறையும் உள்ளது.

தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் ஏராளமான கைதிகள் பரோல் கேட்டு சிறைத்துறை சூப்பிரண்டிடம் விண்ணப்பித்தனர். அவர்களது மனுவை சிறைத் துறை அதிகாரிகள் பரிசீலித்து 150 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது.

இதையடுத்து கைதிகள் இன்று காலை பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். கைதிகளுக்கு இன்று முதல் 5 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டு உள்ளது. ஊருக்கு சென்றுள்ள கைதிகள் வருகிற 20-ந்தேதி மாலைக்குள் சிறைக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News