செய்திகள்

அண்ணா சிலைக்கு மாலை: தினகரன்-தீபா ஆதரவாளர்கள் திடீர் மோதல்

Published On 2017-09-15 08:13 GMT   |   Update On 2017-09-15 08:13 GMT
சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக டிடிவி தினகரன் - தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க இன்று காலை தீபா சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தினகரன் ஆதரவாளர்களுக்கும் தீபாவுடன் சென்றிருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் உருவானது.

இருதரப்பினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த சிலர் இருவரையும் சமாதானம் செய்தனர். இதன் பின்னர் தீபா மாலை அணிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News