செய்திகள்
சசிகலா எனது வீட்டுக்கு வந்து செல்லவில்லை: அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மறுப்பு
சசிகலா எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார் என்று கூறப்படும் தகவல் உண்மையில்லை, எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது என்று அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறி உள்ளார்.
ஓசூர்:
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு அருகில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வீட்டுக்கு சசிகலாவும், இளவரசியும் அடிக்கடி சென்று வந்தார் என்றும் சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா புகார் கூறி இருந்தார்.
இது குறித்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியிடம் இன்று நமது நிருபர் கேட்டார்.
எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது. எனது வீட்டில் இருந்து சசிகலாவுக்கு சாப்பாடு, மருந்து உள்ளிட்ட எந்த பொருட்களும் கொண்டு சென்று கொடுக்கவில்லை. அது போல அவர் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார் என்று கூறப்படும் தகவலும் உண்மையில்லை. அவர் எனது வீட்டுக்கு வந்து செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு அருகில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வீட்டுக்கு சசிகலாவும், இளவரசியும் அடிக்கடி சென்று வந்தார் என்றும் சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா புகார் கூறி இருந்தார்.
இது குறித்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியிடம் இன்று நமது நிருபர் கேட்டார்.
எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது. எனது வீட்டில் இருந்து சசிகலாவுக்கு சாப்பாடு, மருந்து உள்ளிட்ட எந்த பொருட்களும் கொண்டு சென்று கொடுக்கவில்லை. அது போல அவர் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார் என்று கூறப்படும் தகவலும் உண்மையில்லை. அவர் எனது வீட்டுக்கு வந்து செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.