செய்திகள்
மதுரையில் திருமண ஆசை காட்டி ஆசிரியை கற்பழிப்பு: போலீசில் புகார்
மதுரையில் திருமண ஆசை காட்டி வாலிபர் கற்பழித்ததாக, ஆசிரியை போலீசில் புகார் கூறி உள்ளார்.
மதுரை:
தேனி மாவட்டம், பெரியகுளம் நடுத்தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் லட்சுமி பாக்கியம் (வயது 27), மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சுப்பிரமணியபுரம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். அப்போது பாலிடெக்னிக் ரோட்டில் வெங்கடேசுவரன் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்தேன்.
அந்த நேரத்தில் என்னுடன் பழகிய வெங்கடேசுவரன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார். ஆனால் தற்போது அவர் திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.