செய்திகள்
ராமநாதபுரம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
ராமநாதபுரம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன்கோவில் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் 30 வயது வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபர் பச்சை நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்துள்ளார். அவரது வலது கையில் சில்வர் காப்பு உள்ளது.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடலில் பாட்டில் குத்து காயங்களும் உள்ளன.
நண்பர்களுடன் மது அருந்தும் தகராறில் அவர் குத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.