செய்திகள்
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதை அடுத்து எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
பொன்னேரி:
வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்காள தேசத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகி உள்ளது.
இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இன்று வங்காளதேசம் மேற்கு வங்காள பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இதே போல் கடலூர் துறைமுகம், புதுச்சேரி துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.
வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்காள தேசத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகி உள்ளது.
இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இன்று வங்காளதேசம் மேற்கு வங்காள பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இதே போல் கடலூர் துறைமுகம், புதுச்சேரி துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.