செய்திகள்

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலி

Published On 2017-05-25 09:20 GMT   |   Update On 2017-05-25 09:20 GMT
நெல்லைக்கு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சென்னை வாலிபர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

சென்னை பெசன்ட் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரபீக் அகமது (வயது26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடன் வேலை பார்த்து வந்த நெல்லை பேட்டையை சேர்ந்த வாலிபருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமண விழாவில் கலந்து கொள்ள ரபீக் அகமது மற்றும் அவருடன் வேலை பார்த்த சுமார் 15 பேர் கடந்த 21-ந்தேதி நெல்லை வந்தனர். அனைவரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க விரும்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாளை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி குளித்தனர்.

அப்போது ரபீக் அகமது கால் வழுக்கி ஆழமான பகுதியில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் கூச்சலிட்டார். அவருடன் குளித்தவர்களும் கத்தி கூச்சல் போட்டனர். உடனடியாக அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள், ரபீக் அகமதுவை மீட்டனர். அவருக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ரபீக் அகமது பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News