செய்திகள்

மாதவரத்தில் புதிய லாரி டயர்கள் திருட்டு

Published On 2017-04-29 21:42 GMT   |   Update On 2017-04-29 22:06 GMT
மாதவரத்தில் புதிய லாரி டயர்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்:

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் திரிசூலம். இவர் மாதவரம் பஸ் நிலையம் அருகே லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வருகிறார்.

மேலும் இவருக்கு சொந்தமாக லாரிகள் உள்ளன. தன்னுடைய லாரிகளுக்கு 8 புதிய டயர்களை வாங்கி அலுவலகம் அருகே உள்ள ஒரு குடோனில் திரிசூலம் பூட்டி வைத்திருந்தார்.

அந்த டயர்களை எடுக்க குடோனுக்கு நேற்று அவர் சென்றார். அப்போது குடோன் பூட்டை உடைத்து அங்கிருந்த டயர்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து மாதவரம் போலீசில் திரிசூலம் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News