செய்திகள்

அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி: சுகேஷ் சந்திரசேகருக்கு பிடிவாரண்ட்

Published On 2017-04-28 14:02 GMT   |   Update On 2017-04-28 14:02 GMT
அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை:

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ந்தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவரை டெல்லி தீஸ் ஹசாரே நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, சுகேஷ் சந்திர சேகரை மே 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில், 19 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. எனவே, சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News