செய்திகள்
கனிமுருகன்

மதுரை அருகே லாரி மோதி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2017-04-26 05:02 GMT   |   Update On 2017-04-26 10:14 GMT
மதுரை அருகே லாரி மோதி விபத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம், வல்லநாடு செங்கப்படையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் கனிமுருகன் (வயது 27). திருமணமாகவில்லை. இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரை ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கு பலியான பேரையூரை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் உடல் நேற்று மதுரை வந்தது. அவரது உடல் சொந்த ஊருக்கு சென்றபோது பாதுகாப்பு பணிக்காக கனிமுருகன் உடன் சென்றார். பின்னர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். சம்பக்குளம் அருகே பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News