செய்திகள்

நிலத்தடி நீரை விற்பனை செய்ய எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி பா.ஜ.க. நிர்வாகி போராட்டம்

Published On 2017-04-25 09:57 GMT   |   Update On 2017-04-25 09:57 GMT
நிலத்தடி நீரை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. நிர்வாகி டெல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.
பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டை வெங்கநாயக்கன்பட்டியில் தனிநபர்கள் நிலத்தடி நீரை எடுத்து வாகனங்களில் கொண்டு சென்று விற்று வந்தனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாக பொதுமக்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் அழகர்சாமி அங்குள்ள செல்போன் டவரில் ஏறி நிலத்தடி நீரை எடுக்கும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீர் போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அழகர்சாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Similar News