செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது: ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2017-04-24 17:36 GMT   |   Update On 2017-04-24 17:36 GMT
திருத்துறைப்பூண்டி அருகே தீ விபத்தில் 3 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலக்கொருக்கையில் வசிப்பவர் தம்புசாமி (54) விவசாயி. இவர் கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவி அருகில் இருந்த ராமலிங்கம்(50) மற்றும் சபாபதி ஆகியோர் வீடும் தீப்பிடித்தது. உடனடியாக தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீ அணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வீரமணி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ மிக்சி, கிரைண்டர் , டிவி உள்ளிட்ட வீட்டுஉபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அருகில் ஏராளமான கூரை வீடுகள் இருந்தன.

அங்கும் தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து நாசமாயின. இது சம்பந்தமாக திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் உள்ளிட்டோர் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News